05.11.2005 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு
சுவீடன் தலைநகரான ஸ்ரோல்காமில்
சுவீடன் ஈழத்தமிழர் ஒன்றியத்தின் 10தாவது ஆண்டு
சிறப்பு நூல் வெளியீடு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு இத்தாலியிலிருந்து எழுத்தாளர்
அல்லையூர் சி.விஜயன் சிறப்பு விருந்தினராகக்
கலந்து சிறப்பித்தார்.
சுவீடன் ஈழத்தமிழர் ஒன்றியத்தின் 10தாவது ஆண்டு சிறப்பு
நூலினை அல்லையூர் சி விஜயன் வெளியீட்டு வைக்க
சுவீடன் ஈழத்தமிழர் ஒன்றியத்தின் தலைவர் திரு.சுப்பிரமணியம்
சிறிதரன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்த நூல் பற்றிய சிறப்புரையை அல்லையூர் சி விஜயன்
நிகழ்தினார்.
தொடர்ந்து ஈழத்தமிழர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர், மற்றும்
ஆசிரியர்கள் முதலானோர் தங்களின் வாழ்த்தினை ஈழத்தமிழர் ஒன்றித்துக்கு
வழங்கினர்.