துளிக் கவிதைகள்
தமிழன் கனவு


தேசியக் கொடி
தேசிய கீதம்
மலர்ந்தது..
தமிழீழம்!
 
பகை

இரும்புப் பறவை
போடும் முட்டை,
தமிழர் நிலம்!
தாலாட்டு

கூலிப் பெண்
வயல் வேலை
ஆலமரத் தொட்டில்!
 
தமிழர் நிலம்

அறுகம் புல்
ஆனை வெளி
அடி சறுக்கும்!
சிறை

இருண்ட சிறையில்
ஒரு உலகம்
கரு!
 
விளம்பரப் பலகை
நிரந்தரமற்ற
விலைவாசி!

 
இருதலைக்
கொள்ளி எறும்பு
போரும் சமாதானமும்!
 
போரீடு

போரை வெற்றி
கொள்...
போர்வைக்கு;ளிருந்து
புறப்பட்டவ(h)ள்!
 
இயந்திரம்

பிள்ளைப் பெறும்
இயந்திரம்
பெண்!
 
உலக வாழ்க்கையின்
ஒத்திகைச் சிறை
கருப்பை!
 
போரும்
விலைவாசியும்
வளர்பிறை நிலவு!
 
காந்தி தேசம்
அகிம்சை தோற்றதும்
உன்னிடம்!
 
வெள்ளை மனிதர்கள்
கருப்பு திருடர்கள்
பாவம் ஏழைகள்!

 
கறுப்புப் பணம்
கள்ள நோட்டு
உயர்ந்த வாழ்க்கை!

 
பெண்ணே!
நீ பூ...
புயலாகவும் இரு!
 
திருப்பணி
தெய்வ நம்பிக்கை
போலி மனிதர்கள்!

 
    மீன்
சிக்காத வலை
இன்டர்நெட்!
 
தென்றல்
நடந்து கொண்டிருக்கிறது
இரட்டை ஐடையில் நீ!

 
மேலும் கவிதை படிக்க....