100.
பண்புடைமை
எண்பதத்தால்
எய்தல்
எளிதென்ப
யார்மாட்டும்
பண்புடைமை
என்னும்
வழக்கு.
யாராயிருந்தாலும்
அவர்களிடத்தில்
எளிமையாகப்
பழகினால்,
அதுவே
பண்புடைமை
என்கிற
சிறந்த
ஒழுக்கத்தைப்
பெறுவதற்கு
எளிதான
வழியாக
அமையும்.
அன்புடைமை
ஆன்ற
குடிப்பிறத்தல்
இவ்விரண்டும்
பண்புடைமை
என்னும்
வழக்கு.
அன்புடையவராக
இருப்பதும்,
உயர்ந்த
குடியில்
பிறந்த
இலக்கணத்துக்கு
உரியவராக
இருப்பதும்தான்
பண்புடைமை
எனக்
கூறப்படுகிற
சிறந்த
நெறியாகும்.
உறுப்பொத்தல்
மக்களொப்
பன்றால்
வெறுத்தக்க
பண்பொத்தல்
ஒப்பதாம்
ஒப்பு.
நற்பண்பு
இல்லாதவர்களை
அவர்களின்
உடல்
உறுப்புகளை
மட்டுமே
ஒப்பிட்டுப்
பார்த்து
மக்கள்
இனத்தில்
சேர்த்துப்
பேசுவது
சரியல்ல்
நற்பண்புகளால்
ஒத்திருப்பவர்களே
மக்கள்
எனப்படுவர்.
நயனொடு
நன்றி
புரிந்த
பயனுடையார்
பண்புள
ராட்டும்
உலகு.
நீதி
வழுவாமல்
நன்மைகளைச்
செய்து
பிறருக்குப்
பயன்படப்
பணியாற்றுகிறவர்களின்
நல்ல பண்பை
உலகம்
பாராட்டும்.
நகையுள்ளும்
இன்னா
திகழ்ச்சி
பகையுள்ளும்
பண்புள
பாடறிவார்
மாட்டு.
விளையாட்டாகக்கூட
ஒருவரை
இகழ்ந்து
பேசுவதால்
கேடு
உண்டாகும்.
அறிவு
முதிர்ந்தவர்கள்,
பகைவரிடமும்
பண்புகெடாமல்
நடந்து
கொள்வார்கள்.
பண்புடையார்ப்
பட்டுண்
டுலகம்
அதுவின்றேல்
மண்புக்கு
மாய்வது மன்.
உலக
நடைமுறைகள்,
பண்பாளர்களைச்
சார்ந்து
இயங்க
வேண்டும்.
இல்லையேல்
அந்த
நடைமுறைகள்
நாசமாகிவிடும்.
அரம்போலும்
கூர்மைய
ரேனும்
மரம்போல்வர்
மக்கட்பண்
பில்லா தவர்.
அரம்
போன்ற
கூர்மையான
அறிவுடைய
மேதையாக
இருந்தாலும்,
மக்களுக்குரிய
பண்பு
இல்லாதவர்
மரத்துக்கு
ஒப்பானவரேயாவார்.
நண்பாற்றார்
ஆகி நயமில
செய்வார்க்கும்
பண்பாற்றார்
ஆதல் கடை.
நட்புக்கு
ஏற்றவராக
இல்லாமல்
தீமைகளையே
செய்து
கொண்டிருப்பவரிடம்,
நாம் பொறுமை
காட்டிப்
பண்புடையவராக
நடந்து
கொள்ளாவிட்டால்
அது இழிவான
செயலாகக்
கருதப்படும்.
நகல்வல்லர்
அல்லார்க்கு
மாயிரு
ஞாலம்
பகலும்பாற்
பட்டன்
றிருள்.
நண்பர்களுடன்
பழகி மகிழத்
தெரியாதவர்களுக்கு
உலகம்
என்பது
பகலில் கூட
இருட்டாகத்தான்
இருக்கும்.
பண்பிலான்
பெற்ற
பெருஞ்செல்வம்
நன்பால்
கலந்தீமை
யால்திரிந்
தற்று.
பாத்திரம்
களிம்பு
பிடித்திருந்தால்,
அதில் ஊற்றி
வைக்கப்படும்
பால்
எப்படிக்
கெட்டுவிடுமோ
அதுபோலப்
பண்பு
இல்லாதவர்கள்
பெற்ற
செல்வமும்
பயனற்றதாகி
விடும். |
|