|
செல்லிடத்துக்
காப்பான்
சினங்காப்பான்
அல்லிடத்துக்
காக்கினென்
காவாக்கா
லென்.
தன் சினம்
பலிதமாகுமிடத்தில்
சினம்
கொள்ளாமல்
இருப்பவனே
சினங்காப்பவன்;
பலிக்காத
இடத்தில்
சினத்தைக்
காத்தால்
என்ன?
காக்காவிட்டால்
என்ன?
செல்லா
இடத்துச்
சினந்தீது
செல்லிடத்தும்
இல்லதனின்
தீய பிற.
வலியோரிடம்
சினம்
கொண்டால்,
அதனால்
கேடு
விளையும்.
மெலியோரிடம்
சினம்
கொண்டாலும்
அதைவிடக்
கேடு
வேறொன்றுமில்லை.
மறத்தல்
வெகுளியை
யார்மாட்டுந்
தீய
பிறத்தல்
அதனான்
வரும்.
யார்மீது
சினம்
கொண்டாலும்
அதை
மறந்துவிட
வேண்டும்.
இல்லாவிட்டால்
அந்தச்
சினமே தீய
விளைவுகளுக்குக்
காரணமாகும்.
நகையும்
உவகையுங்
கொல்லுஞ்
சினத்தின்
பகையும்
உளவோ பிற.
சினம்
கொள்கிறவர்களுக்கு
முகமலர்ச்சி
மாத்திரமின்றி
மனமகிழ்ச்சியும்
மறைந்து
போய்
விடும்.
தன்னைத்தான்
காக்கின்
சினங்காக்க
காவாக்கால்
தன்னையே
கொல்லுஞ்
சினம்.
ஒருவன்
தன்னைத்தானே
காத்துக்
கொள்ள
வேண்டுமானால்,
சினத்தைக்
கைவிட
வேண்டும்.
இல்லையேல்
சினம், அவனை
அழித்துவிடும்.
சினமென்னுஞ்
சேர்ந்தாரைக்
கொல்லி
இனமென்னும்
ஏமப்
புணையைச்
சுடும்.
சினங்கொண்டவரை
அழிக்கக்
கூடியதாகச்
சினமென்னும்
தீயே
இருப்பதால்,
அது அவரை
மட்டுமின்றி,
அவரைப்
பாதுகாக்கும்
தோணி
போன்ற
சுற்றத்தையும்
அழித்துவிடும்.
சினத்தைப்
பொருளென்று
கொண்டவன்
கேடு
நிலத்தறைந்தான்
கைபிழையா
தற்று.
நிலத்தைக்
கையால்
அறைந்தவனுக்கு
அவன்
கைதான்
வலிக்கும்.
அது
போலத்தான்
சினத்தைப்
பண்பாகக்
கொண்டவன்
நிலையும்
ஆகும்.
இணரெரி
தோய்வன்ன
இன்னா
செயினும்
புணரின்
வெகுளாமை
நன்று.
தீயினால்
சுட்டெரிப்பது
போன்ற
துன்பங்களை
ஒருவன்
தொடர்ந்து
செய்தாலும்
அதற்காக
வருந்தி
அவன் உறவு
கொள்ள
வரும் போது
சினங்கொள்ளாமல்
இருப்பதே
நல்லது.
உள்ளிய
தெல்லாம்
உடனெய்தும்
உள்ளத்தால்
உள்ளான்
வெகுளி
யெனின்.
உள்ளத்தால்
சினங்கொள்ளாதவனாக
இருந்தால்
எண்ணியவற்றையெல்லாம்
உடனடியாகப்
பெற
முடியும்.
இறந்தார்
இறந்தா
ரனையர்
சினத்தைத்
துறந்தார்
துறந்தார்
துணை.
எல்லையற்ற
சினம்
கொள்வார்
இறந்தவர்க்கு
ஒப்பாவார்.
சினத்தை
அறவே
துறந்தவர்
துறவிக்கு
ஒப்பாவார்.
|