|
32. இன்னா
செய்யாமை
சிறப்பீனுஞ்
செல்வம்
பெறினும்
பிறர்க்கின்னா
செய்யாமை
மாசற்றார்
கோள்.
மிகுந்த
செழிப்பைத்
தருகின்ற
செல்வத்தைப்
பெறக்
கூடுமென்றாலும்
அதன்
பொருட்டுப்
பிறருக்குப்
கேடு
செய்யாமலிருப்பதே
மாசற்றவர்களின்
கொள்கையாகும்.
கறுத்தின்னா
செய்தவக்
கண்ணும்
மறுத்தின்னா
செய்யாமை
மாசற்றார்
கோள்.
சினங்கொண்டு
சொல்லாலோ
செயலாலோ
ஒருவன்
துன்பம்
தரும்போது
அந்தத்
துன்பத்தை
அவனுக்குத்
திரும்பச்
செய்யாமல்
தாங்கிக்
கொள்வதே
சிறந்த
மனிதரின்
கொள்கையாகும்.
செய்யாமற்
செற்றார்க்கும்
இன்னாத
செய்தபின்
உய்யா
விழுமந்
தரும்.
யாருக்கும்
கேடு
செய்யாமல்
இருப்பவருக்குப்
பகைவர்
கேடு
செய்துவிட்டால்
அதற்குப்
பதிலாக
அவருக்கு
வரும் கேடு
மீளாத்
துன்பம்
தரக்
கூடியதாகும்.
இன்னாசெய்
தாரை
ஒறுத்தல்
அவர்நாண
நன்னயஞ்
செய்து
விடல்.
நமக்குத்
தீங்கு
செய்தவரைத்
தண்டிப்பதற்குச்
சரியான வழி,
அவர்
வெட்கித்
தலைகுனியும்படியாக
அவருக்கு
நன்மை
செய்வதுதான்.
அறிவினான்
ஆகுவ
துண்டோ
பிறிதின்நோய்
தந்நோய்போற்
போற்றாக்
கடை.
பிற
உயிர்களுக்கு
வரும்
துன்பத்தைத்
தம்
துன்பம்
போலக்
கருதிக்
காப்பாற்ற
முனையாதவர்களுக்கு
அறிவு
இருந்தும்
அதனால்
எந்தப்
பயனுமில்லை.
இன்னா
எனத்தா
னுணர்ந்தவை
துன்னாமை
வேண்டும்
பிறன்கட்
செயல்.
ஒருவன்
தன்னுடைய
வாழ்க்கையில்
துன்பமானவை
என்று
அனுபவித்து
அறிந்தவற்றை,
மற்றவர்க்குச்
செய்யாமலிருக்க
வேண்டும்.
எனைத்தானும்
எஞ்ஞான்றும்
யார்க்கும்
மனத்தானாம்
மாணாசெய்
யாமை தலை.
எவ்வளவிலும்,
எப்பொழுதும்,
எவரையும்
இழிவுபடுத்தும்
செயலை
மனத்தால்கூட
நினைக்காமல்
இருப்பதே
முதன்மையான
சிறப்பாகும்.
தன்னுயிர்க்
கின்னாமை
தானறிவான்
என்கொலோ
மன்னுயிர்க்
கின்னா
செயல்.
பிறர்
தரும்
துன்பத்தால்
தனக்கேற்படும்
துன்பத்தை
உணர்ந்தவன்
அந்தத்
துன்பத்தைப்
பிற
உயிர்களுக்குத்
தரவும்
கூடாதல்லவா?
பிறர்க்கின்னா
முற்பகல்
செய்யின்
தமக்கின்னா
பிற்பகல்
தாமே வரும்.
பிறருக்குத்
தீங்கு
விளைவித்துவிட்டோம்
என்று
ஒருவர்
மகிழ்ந்து
கொண்டிருக்கும்போதே,
அதேபோன்ற
தீங்கு
அவரையே
தாக்கும்.
நோயெல்லா
நோய்செய்தார்
மேலவா
நோய்செய்யார்
நோயின்மை
வேண்டு
பவர்.
தீங்கு
செய்தவருக்கே
தீங்குகள்
வந்து
சேரும்;
எனவே
தீங்கற்ற
வாழ்வை
விரும்புகிறவர்கள்,
பிறருக்குத்
தீங்கிழைத்தல்
கூடாது.
|