|
34. நிலையாமை
நில்லாத
வற்றை
நிலையின
என்றுணரும்
புல்லறி
வாண்மை கடை.
நிலையற்றவைகளை
நிலையானவை
என
நம்புகின்ற
அறியாமை
மிக
இழிவானதாகும்.
கூத்தாட்
டவைக்குழாத்
தற்றே
பெருஞ்செல்வம்
போக்கும்
அருவிளிந்
தற்று.
சேர்த்து
வைத்த
பணமும்
சொத்தும்
ஒருவரை
விட்டுப்
போவது,
கூத்து
முடிந்ததும்
மக்கள்
அரங்கத்தை
விட்டுக்
கலைந்து
செல்வதைப்
போன்றதாகும்.
அற்கா
இயல்பிற்றுச்
செல்வம்
அதுபெற்றால்
அற்குப
ஆங்கே
செயல்.
நம்மை
வந்தடையும்
செல்வம்
நிலையற்றது
என்பதை
உணர்ந்து
அதைக்
கொண்டு
அப்பொழுதே
நிலையான
நற்செயல்களில்
ஈடுபட
வேண்டும்.
நாளென
ஒன்றுபோற்
காட்டி
உயிரீரும்
வாள
துணர்வார்ப்
பெறின்.
வாழ்க்கையைப்
பற்றி
உணர்ந்தவர்கள்,
நாள்
என்பது
ஒருவரின்
ஆயுளை
அறுத்துக்
குறைத்துக்
கொண்டேயிருக்கும்
வாள் என்று
அறிவார்கள்.
நாச்செற்று
விக்குள்மேல்
வாராமுன்
நல்வினை
மேற்சென்று
செய்யாப்
படும்.
வாழ்க்கையின்
நிலையாமையை
உணர்ந்து
நம் உயிர்
இருக்கும்
போதே
உயர்ந்த
நற்பணிகளை
ஆற்றிட
முனைய
வேண்டும்.
நெருந
லுளனொருவன்
இன்றில்லை
என்னும்
பெருமை
யுடைத்திவ்
வுலகு.
இந்த
உலகமானது,
நேற்று
உயிருடன்
இருந்தவரை
இன்று
இல்லாமல்
செய்து
விட்டோம்
என்ற
அகந்தையைப்
பெருமையாகப்
கொண்டதாகும்.
ஒருபொழுதும்
வாழ்வ
தறியார்
கருதுப
கோடியு
மல்ல பல.
ஒரு
பொழுதுகூட
வாழ்க்கையைப்
பற்றி
உண்மையைச்
சிந்தித்து
அறியாதவர்களே,
ஆசைக்கோர்
அளவின்றி
மனக்
கோட்டைகள்
கட்டுவார்கள்.
குடம்பை
தனித்தொழியப்
புள்பறந்
தற்றே
உடம்போ
டுயிரிடை
நட்பு.
உடலுக்கும்
உயிருக்கும்
உள்ள உறவு
முட்டைக்கும்
பறவைக்
குஞ்சுக்கும்
உண்டான
உறவு
போன்றதுதான்.
உறங்குவது
போலுஞ்
சாக்கா
டுறங்கி
விழிப்பது
போலும்
பிறப்பு.
நிலையற்ற
வாழ்க்கையில்,
உறக்கத்திற்குப்
பிறகு
விழிப்பதைப்
போன்றது
பிறப்பு;
திரும்ப
விழிக்க
முடியாத
மீளா
உறக்கம்
கொள்வதே
இறப்பு.
புக்கி
லமைந்தின்று
கொல்லோ
உடம்பினுள்
துச்சி
லிருந்த
உயிர்க்கு.
உடலுடன்
தங்கியுள்ள
உயிருக்கு
அதனைப்
பிரிந்தால்
வேறு
புகலிடம்
கிடையாது.
|