|
38. ஊழ்
ஆகூழால்
தோன்றும்
அசைவின்மை
கைப்பொருள்
போகூழால்
தோன்று மடி.
ஆக்கத்திற்கான
இயற்கை நிலை
சோர்வு தலை
காட்டாத
ஊக்கத்தைக்
கொடுக்கும்.
ஊக்கத்தின்
அழிவுக்கான
இயற்கைநிலை
சோம்பலை
ஏற்படுத்தும்.
பேதைப்
படுக்கும்
இழவூழ்
அறிவகற்றும்
ஆகலூ
ழுற்றக் கடை.
அழிவுதரும்
இயற்கை நிலை,
அறியாமையை
உண்டாக்கும்;
ஆக்கம்
தரும்
இயற்கை நிலை,
அதற்கேற்ப
அறிவை
விரிவாக்கும்.
நுண்ணிய
நூல்பல
கற்பினும்
மற்றுந்தன்
உண்மை யறிவே
மிகும்.
கூரிய
அறிவு
வழங்கக்
கூடிய
நூல்களை
ஒருவர்
கற்றிருந்த
போதிலும்
அவரது
இயற்கை
அறிவே
மேலோங்கி
நிற்கும்.
இருவே
றுலகத்
தியற்கை
திருவேறு
தௌ்ளிய
ராதலும்
வேறு.
உலகின்
இயற்கை நிலை
இரு
வேறுபட்டதாகும்.
ஒருவர்
செல்வமுடையவராகவும்,
ஒருவர்
அறிவுடையவராகவும்
இருப்பதே
அந்த
வேறுபாடாகும்.
நல்லவை
யெல்லாஅந்
தீயவாந்
தீயவும்
நல்லவாஞ்
செல்வஞ்
செயற்கு.
நல்ல
செயல்களை
ஆற்ற
முற்படும்போது
அவை
தீமையில்
போய்
முடிந்துவிடுவதும்,
தீய
செயல்களை
ஆற்றிட
முனையும்போது
அவை
நல்லவைகளாக
முடிந்து
விடுவதும்
இயற்கை நிலை
எனப்படும்.
பரியினும்
ஆகாவாம்
பாலல்ல
உய்த்துச்
சொரியினும்
போகா தம.
தனக்கு
உரிமையல்லாதவற்றை
எவ்வளவுதான்
பாதுகாப்பாக
வைத்தாலும்
அவை
தங்காமல்
போய்விடக்
கூடும்;
உரிமையுள்ளவற்றை
எங்கே
கொண்டு
போய்ப்
போட்டாலும்
அவை எங்கும்
போகமாட்டா.
வகுத்தான்
வகுத்த
வகையல்லாற்
கோடி
தொகுத்தார்க்குந்
துய்த்த
லரிது.
வகுத்து
முறைப்படுத்திய
வாழ்க்கை
நெறியை
ஒட்டி
நடக்கா
விட்டால்
கோடிப்
பொருள்
குவித்தாலும்,
அதன் பயனை
அனுபவிப்பது
என்பது
அரிதேயாகும்.
துறப்பார்மன்
துப்புர
வில்லார்
உறற்பால
ஊட்டா கழியு
மெனின்.
நுகர்வதற்குரியது
எதுவுமில்லை
என்ற
உறுதியினால்,
தம்மை
வருத்தக்கூடிய
உணர்வுகள்
வந்து
வருத்தாமல்
நீங்கிவிடுமானால்
துறவறம்
மேற்கொள்வர்.
நன்றாங்கால்
நல்லவாக்
காண்பவர்
அன்றாங்கால்
அல்லற்
படுவ தெவன்.
நன்மையும்
தீமையும்
வாழ்க்கையில்
மாறி மாறி
வரும். நன்மை
கண்டு
மகிழ்கிறவர்கள்,
தீமை
விளையும்போது
மட்டும்
மனம்
கலங்குவது
ஏன்?
ஊழிற்
பெருவலி
யாவுள
மற்றொன்று
சூழினுந்
தான்முந்
துறும்.
இயற்கை
நிலையை
மாற்றி
மற்றொரு
செயற்கை
நிலையை
அமைத்திட
முனைந்தாலும்,
இயற்கை
நிலையே
முதன்மையாக
வந்து
நிற்பதால்
அதைவிட
வலிமையானவையாக
வேறு எவை
இருக்கின்றன?
|