|
செல்வத்துட்
செல்வஞ்
செவிச்செல்வம்
அச்செல்வஞ்
செல்வத்து
ளெல்லாந்
தலை.
செழுமையான
கருத்துகளைச்
செவிவழியாகப்
பெறும்
செல்வமே
எல்லாச்
செல்வங்களுக்கும்
தலையாய
செல்வமாகும்.
செவிக்குண
வில்லாத
போழ்து
சிறிது
வயிற்றுக்கும்
செவி
வழியாக
இன்பம்
தரும் உணவு
இல்லாதபோதே
சிறிதளவு
உணவு
வயிற்றுக்குத்
தரும் நிலை
ஏற்படும்.
செவியுணவிற்
கேள்வி
யுடையார்
அவியுணவின்
ஆன்றாரோ
டொப்பர்
நிலத்து.
குறைந்த
உணவருந்தி
நிறைந்த
அறிவுடன்
விளங்கும்
ஆன்றோர்க்கு
ஒப்பாகக்
கேள்வி
ஞானம் எனும்
செவியுணவு
அருந்துவோர்
எண்ணப்படுவர்.
கற்றில
னாயினுங்
கேட்க
அஃதொருவற்
கொற்கத்தின்
ஊற்றாந்
துணை.
நூல்களைக்
கற்காவிட்டாலும்,
கற்றவரிடம்
கேட்டுத்
தெரிந்து
கொண்டால்,
அது நடை
தளர்ந்தவனுக்கு
உதவிடும்
ஊன்றுகோலைப்
போலத்
துணையாக
அமையும்.
இழுக்க
லுடையுழி
ஊற்றுக்கோ
லற்றே
ஒழுக்க
முடையார்வாய்ச்
சொல்.
வழுக்கு
நிலத்தில்
நடப்பதற்கு
ஊன்றுகோல்
உதவுவது
போல்
ஒழுக்கம்
உடையவர்களின்
அறிவுரையானது
உதவும்.
எனைத்தானும்
நல்லவை
கேட்க
அனைத்தானும்
ஆன்ற பெருமை
தரும்.
நல்லவற்றை
எந்த
அளவுக்குக்
கேட்கிறோமோ
அந்த
அளவுக்குப்
பெருமை
கிடைக்கும்
என்ற
நம்பிக்கையுடன்
இருக்க
வேண்டும்.
பிழைத்துணர்ந்தும்
பேதைமை
சொல்லா
ரிழைத்துணர்ந்
தீண்டிய
கேள்வி யவர்.
எதையும்
நுணுகி
ஆராய்வதுடன்
கேள்வி
அறிவும்
உடையவர்கள்,
சிலவற்றைப்
பற்றித்
தவறாக
உணர்ந்திருந்தாலும்
கூட,
அப்போதும்
அறிவற்ற
முறையில்
பேசமாட்டார்கள்.
கேட்பினுங்
கேளாத்
தகையவே
கேள்வியால்
தோட்கப்
படாத செவி.
இயற்கையாகவே
கேட்கக்கூடிய
காதுகளாக
இருந்தாலும்
அவை நல்லோர்
உரைகளைக்
கேட்க
மறுத்தால்
செவிட்டுக்
காதுகள்
என்றே
கூறப்படும்.
நுணங்கிய
கேள்விய
ரல்லார்
வணங்கிய
வாயின ராத
லரிது.
தெளிவான
கேள்வியறிவு
இல்லாதவர்கள்,
அடக்கமாகப்
பேசும்
அமைதியான
பண்புடையவர்களாக
இருக்க
இயலாது.
செவியிற்
சுவையுணரா
வாயுணர்வின்
மாக்கள்
அவியினும்
வாழினு மென்.
செவிச்சுவை
உணராமல்
வாயின்
சுவைக்காக
மட்டுமே
வாழும்
மக்கள்
உயிரோடு
இருப்பதும்
ஒன்றுதான்
இல்லாமற்
போவதும்
ஒன்றுதான்.
|