|
அறனறிந்து
மூத்த
அறிவுடையார்
கேண்மை
திறனறிந்து
தேர்ந்து
கொளல்.
அறமுணர்ந்த
மூதறிஞர்களின்
நட்பைப்
பெறும் வகை
அறிந்து,
அதனைத்
தேர்ந்தெடுத்துக்
கொள்ள
வேண்டும்.
உற்றநோய்
நீக்கி
உறாஅமை
முற்காக்கும்
பெற்றியார்ப்
பேணிக்
கொளல்.
வந்துள்ள
துன்பத்தைப்
போக்கி,
மேலும்
துன்பம்
நேராமல்
காக்கவல்ல
பெரியோர்களைத்
துணையாகக்
கொள்ள
வேண்டும்.
அரியவற்று
ளெல்லாம்
அரிதே
பெரியாரைப்
பேணித்
தமராக்
கொளல்.
பெரியவர்களைப்
போற்றிப்
பாராட்டி
அவர்களுடன்
உறவாடுதல்
எல்லாப்
பேறுகளையும்
விடப்
பெரும்
பேறாகும்.
தம்மிற்
பெரியார்
தமரா
ஒழுகுதல்
வன்மையு
ளெல்லாந்
தலை.
அறிவு
ஆற்றல்
ஆகியவற்றில்
தம்மைக்
காட்டிலும்
சிறந்த
பெரியவராய்
இருப்பவரோடு
உறவுகொண்டு
அவர்வழி
நடப்பது
மிகப்பெரும்
வலிமையாக
அமையும்.
சூழ்வார்கண்
ணாக
ஒழுகலான்
மன்னவன்
சூழ்வாரைச்
சூழ்ந்து
கொளல்.
கண்ணாக
இருந்து
எதனையும்
கண்டறிந்து
கூறும்
அறிஞர்
பெருமக்களைச்
சூழ
வைத்துக்
கொண்டிருப்பதே
ஆட்சியாளர்க்கு
நன்மை
பயக்கும்.
தக்கா
ரினத்தனாய்த்
தானொழுக
வல்லானைச்
செற்றார்
செயக்கிடந்த
தில்.
அறிவும்,
ஆற்றலும்
கொண்ட
ஒருவன்,
தன்னைச்
சூழவும்
அத்தகையோரையே
கொண்டிருந்தால்
பகைவர்களால்
எந்தத்
தீங்கையும்
விளைவிக்க
முடியாது.
இடிக்குந்
துணையாரை
யாள்வாரை
யாரே
கெடுக்குந்
தகைமை யவர்.
இடித்துரைத்து
நல்வழி
காட்டுபவரின்
துணையைப்
பெற்று
நடப்பவர்களைக்
கெடுக்கும்
ஆற்றல்
யாருக்கு
உண்டு?
இடிப்பாரை
இல்லாத ஏமரா
மன்னன்
கெடுப்பா
ரிலானுங்
கெடும்.
குறையை
உணர்த்துவோர்
இல்லாத அரசு
தானாகவே
கெடும்.
முதலிலார்க்
கூதிய
மில்லை
மதலையாஞ்
சார்பிலார்க்
கில்லை நிலை.
கட்டடத்தைத்
தாங்கும்
தூண் போலத்
தம்மைத்
தாங்கி
நிற்கக்
கூடிய
துணையில்லாதவர்களின்
நிலை,
முதலீடு
செய்யாத
வாணிபத்தில்
வருவாய்
இல்லாத
நிலையைப்
போன்றதேயாகும்.
பல்லார்
பகைகொளலிற்
பத்தடுத்த
தீமைத்தே
நல்லார்
தொடர்கை
விடல்.
நல்லவர்களின்
தொடர்பைக்
கைவிடுவது
என்பது
பலருடைய
பகையைத்
தேடிக்
கொள்வதை
விடக் கேடு
விளைவிக்கக்
கூடியதாகும்.
|