97. மானம்
இன்றி
அமையாச்
சிறப்பின
ஆயினும்
குன்ற
வருப விடல்.
கட்டாயமாகச்
செய்து தீர
வேண்டிய
செயல்கள்
என்றாலும்கூட
அவற்றால்
தனது பெருமை
குறையுமானால்
அந்தச்
செயல்களைத்
தவிர்த்திடல்
வேண்டும்.
சீரினும்
சீரல்ல
செய்யாரே
சீரொடு
பேராண்மை
வேண்டு பவர்.
புகழ்மிக்க
வீர
வாழ்க்கையை
விரும்புகிறவர்,
தனக்கு
எப்படியும்
புகழ்
வரவேண்டுமென்பதற்காக
மான
உணர்வுக்குப்
புறம்பான
காரியத்தில்
ஈடுபடமாட்டார்.
பெருக்கத்து
வேண்டும்
பணிதல்
சிறிய
சுருக்கத்து
வேண்டும்
உயர்வு.
உயர்ந்த
நிலை
வரும்போது
அடக்க
உணர்வும்,
அந்த நிலை
மாறிவிட்ட
சூழலில்
யாருக்கும்
அடிமையாக
அடங்கி
நடக்காத
மான
உணர்வும்
வேண்டும்.
தலையின்
இழிந்த
மயிரனையர்
மாந்தர்
நிலையின்
இழிந்தக்
கடை.
மக்களின்
நெஞ்சத்தில்
உயர்ந்த
இடம்
பெற்றிருந்த
ஒருவர்
மானமிழந்து
தாழ்ந்திடும்போது,
தலையிலிருந்து
உதிர்ந்த
மயிருக்குச்
சமமாகக்
கருதப்படுவார்.
குன்றின்
அனையாரும்
குன்றுவர்
குன்றுவ
குன்றி
அனைய செயின்.
குன்றினைப்
போல்
உயர்ந்து
கம்பீரமாக
நிற்பவர்களும்
ஒரு
குன்றிமணி
அளவு
இழிவான
செயலில்
ஈடுபட்டால்
தாழ்ந்து
குன்றிப்
போய்
விடுவார்கள்.
புகழின்றால்
புத்தேணாட்
டுய்யாதால்
என்மற்
றிகழ்வார்பின்
சென்று நிலை.
இகழ்வதையும்
பொறுத்துக்கொண்டு,
மானத்தை
விட்டுவிட்டு
ஒருவர்
பின்னே
பணிந்து
செல்வதால்
என்ன புகழ்
கிடைக்கும்?
இல்லாத
சொர்க்கமா
கிடைக்கும்?
ஒட்டார்பின்
சென்றொருவன்
வாழ்தலின்
அந்நிலையே
கெட்டான்
எனப்படுதல்
நன்று.
தன்னை
மதிக்காதவரின்
பின்னால்
சென்று
உயிர்
வாழ்வதைவிடச்
செத்தொழிவது
எவ்வளவோ
மேல்.
மருந்தோமற்
றூனோம்பும்
வாழ்க்கை
பெருந்தகைமை
பீடழிய
வந்த இடத்து.
சாகாமலே
இருக்க
மருந்து
கிடையாது.
அப்படி
இருக்கும்போது
உயிரைவிட
நிலையான
மானத்தைப்
போற்றாமல்,
வாழ்க்கை
மேம்பாட்டுக்காக
ஒருவர், தமது
பெருமையைக்
குறைத்துக்
கொள்வது
இழிவான
செயலாகும்.
மயிர்நீப்பின்
வாழாக்
கவரிமா
அன்னார்
உயிர்நீப்பர்
மானம் வரின்.
உடலில்
உள்ள உரோமம்
நீக்கப்பட்டால்
உயிர்
வாழாது
கவரிமான்
என்பார்கள்.
அதுபோல்
மானம் அழிய
நேர்ந்தால்
உயர்ந்த
மனிதர்கள்
உயிரையே
விட்டு
விடுவார்கள்.
இளிவரின்
வாழாத மானம்
உடையார்
ஒளிதொழு
தேத்தும்
உலகு.
மானம்
அழியத்தக்க
இழிவு
வந்ததே
என்று உயிரை
மாய்த்துக்
கொள்ளக்
கூடியவர்களின்
புகழை உலகம்
எக்காலமும்
போற்றி
நிற்கும். |
|